ஒரு கனவில் அரைகுறையாகக் கண்டது :
மாமி : "ஸ்ரீராமா! ஜோசியத்த பத்தி உன்னோட அபிப்ப்ராயாத சொல்லு"
நான் : "என்ன கேள்வி மாமி இது?"
மாமி : "என்னடா நார்மல் கேள்விதானே!"
நான் : "சரி. எனக்கு ஜோசியத்த பத்தி என்ன தெரியும் னு கொஞ்சம் சொல்லுங்கோளேன் "
மாமி : "எனக்கு பெருசா ஒண்ணும் தெரியாது. ஏதோ பத்திரிக்கைல படிச்சதுதான்."
நான் : "நான் அதக் கேக்கல. 'எனக்கு' ஜோசியத்த பத்தி என்ன தெரியும் னு உங்களுக்கு தெரியுமோ அத கொஞ்சம் சொல்லுங்கோ னு கேட்டேன்"
மாமி : "அது எப்படிடா எனக்கு தெரியும்? இப்படி அர்த்தாம் இல்லாத கேள்வியா கேக்கார!"
நான் : "ஒருத்தனுக்கு ஒரு விஷயத்த பத்தி தெரியுமா? தெரியாதா? தெரியும்னா எவ்வளவு தெரியும்? அபிப்பிராயம் சொல்லர அளவுக்கு தெரியுமா? னு எல்லாம் தெரிஞ்சுக்காம அபிப்பிராயம் கேக்கறது அர்த்தமான கேள்வியா?"
Vandiyur Veera Raghava Perumal Sundararaja Bhattar
17 hours ago

No comments:
Post a Comment